Tuesday, December 21, 2010

"பிளாஸ்டிக் ஊழி"


டைபாதி ஓரங்களில் பிளாஸ்டிக் மரங்களை பயிரிடுவோம் ...!
பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள் ...

பிளாஸ்டிக் கதிர்களில் பிளாஸ்டிக் தானியங்களை மகசூல் செய்வோம்...!

பிளாஸ்டிக் பசுக்களின் பிளாஸ்டிக் மடிகளில் பிளாஸ்டிக் பாலருந்துவோம்!

தெலுங்குக் கவிஞர் நக்னமுனி எழுதிய கவிதை இது.
  • பிளாஸ்டிக்
    1862ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால்
    கண்டுபிடிக்கப் பட்டது. பிளாஸ்டிக் என்னும் சொல்லுக்கு "எளிதாக அச்சில்
    வார்க்கக்கூடியது" எனப் பொருள். தொடக்கத்தில் இதனை செல்லுலாய்ட் என
    அழைத்தனர். இப்போதும் சில இடங்களில் இப்பெயரே வழங்கி வருகிறது.
    செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பல்வேறு வகைப்பட்ட பிளாஸ்டிக்குகள்
    கண்டுபிடிக்கப்பட்டு, பல வகைப் பொருட்கள் விற்பனைக்கு வந்து விட்டன.

  • குறைந்த
    எடை, வளைந்து கொடுக்கும் தன்மை, காற்று, தண்ணீர் ஆகியவற்றால் சிதையாத
    தன்மை போன்றவற்றால் பிளாஸ்டிக் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.
    பிளாஸ்டிக் பயன்பாடு இன்று உலகில் பல்கிப் பெருகி விட்டதால், இக்காலத்தை
    பிளாஸ்டிக் ஊழி என்றால் அதில் மிகையேதுமில்லை. சிறு பொம்மைகளிலிருந்து
    மிகப் பெரிய தொழிலகங்களில் பயன்படும் பொருட்கள் வரை பல்வேறு வகையான
    பொருட்கள் பிளாஸ்டிக்கைக் கொண்டு செய்யப்படுகின்றன. மருத்துவத் துறையிலும்
    இதன் பயன்பாடு மிக அதிகம். தற்காலத்தில் பிளாஸ்டிக் என்பது, அச்சில்
    வார்த்து வெப்பம் மற்றும் அழுத்தத்தைக் கொண்டு பல்வகை வடிவங்களிலான
    பொருட்களைத் தயாரிக்கும் பிசுபிசுப்புத் தன்மையுடைய பொருளைக் குறிக்கிறது.
    இதற்குச் சாயம் பூசி பல்வேறு நிறங்களையும் அளிக்க முடியும். உலோகத்துடன்
    ஒப்பிடும் போது பிளாஸ்டிக் குறைந்த எடை கொண்டது; காற்று மற்றும் நீரால்
    பாழாகாது; துருப்பிடிக்காதது. நெருப்பினால் அழியாத ஒரு வகைப்
    பிளாஸ்டிக்கும் கூட வந்துவிட்டது. சில பிளாஸ்டிக்குகள் கண்ணாடி போன்று
    நெகிழ்ச்சியுடையவை; பட்டு போன்று மென்மையானவை; எஃகு போன்று உறுதியானவை.
    பல்வகைப் பண்புக் கூறுகளைக் கொண்ட பல்வேறு பிளாஸ்டிக்குகள் உள்ளன. இவற்றின்
    தனிச் சிறப்புகள் காரணமாக மின்சாரத் துறைசார்ந்த பொருட்களிலும் கூடப்
    பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.

  • பினோலிக்,
    அமினோ, செல்லுலோசிக், பாலிமைட், பாலியஸ்டர், ஆல்கைட், புரோட்டின், இன்ன
    பிற. பினோலிக் மற்றும் அமினோ பிளாஸ்டிக்குகள் சூடாக்கி வார்ப்படம்
    செய்யப்படுபவை. வார்ப்படமாக உருவாக்கப்பட்ட பின்னர், இவ்வகைப்
    பிளாஸ்டிக்குகள் உருக்கப்பட முடியாதனவாகும். வார்ப்படங்களாகவும்,
    அச்சுகளாகவும் உற்பத்தி செய்யப்பட்ட இவற்றிலிருந்து பல பொருட்கள்
    செய்யப்படுகின்றன.

  • முதலில்
    பிளாஸ்டிக் துகள்கள் ஒரு வார்ப்பட அச்சில் அடைக்கப்படுகின்றன; பின்னர்
    சூடுபடுத்தப்பட்டு அழுத்தப் பெறும்; குறிபிட்ட நேரத்திற்குப் பின்னர்
    தேவையான பிளாஸ்டிக் தயாராகி விடும். தற்போது எந்திரங்களைக் கொண்டு இச்செயல்
    முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

  • பினோலிக்
    பிளாஸ்டிக்: பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு மின்சாரச் சுவிட்சுகள்,
    பிளக்குகள், உருக்கிகள், ஹோல்டர்கள், தொலைபேசிக் கருவிகள், வானொலிப்
    பெட்டிகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனைக் காகிதம்
    அல்லது துணி போன்ற நார்ப் பொருட்களுடன் கலந்து, பல்வேறு பயனுள்ள பொருட்கள்
    தயாரிக்கப்படுகின்றன. பினோலிக் பிளாஸ்டிக்கின் மெல்லிய படலத்தைப் பரந்த
    துணி அல்லது காகித்தத்தில் பரப்பி மேசை விரிப்புகள், இருக்கை விரிப்புகள்
    போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு
    பெட்டிகள், புத்தக அலமாரிகள், விமானம், ரயில் போன்றவற்றின் உட்பகுதிப்
    பாகங்கள் எனப் பலவகைப் பொருட்களும் செய்யப்படுகின்றன. பொறியியல் பகுதிகளான
    சக்கரங்கள், பற்சக்கரங்கள் போன்றவையும் பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு
    உற்பத்தி செய்யப் படுகின்றன. சுமார் 15-20% மரத்தூளை பினோலிக்
    பிளாஸ்டிக்குடன் கலந்து மரப்பலகைகளைப் போன்றே பிளாஸ்டிக் பலகைகளும்
    தயாரிக்கப்படுகின்றன. பிளைவுட் தொழிற்சாலைகளிலும் இது
    பயன்படுத்தப்படுகிறது.

  • அமினோ
    பிளாஸ்டிக்: அமினோ பிளாஸ்டிக்கில் "யூரியா" மற்றும் "மெலாமைன்" வகைகள்
    மிக முக்கியமானவை. யூரியா பிளாஸ்டிக் மிகவும் உறுதியானது; தனது வடிவத்தை
    இழக்காது; இது சுவையற்றது, மணமற்றது, எந்த நிறத்தையும்
    ஏற்றுக்கொள்ளக்கூடியது. இப்பண்புகள் காரணமாக, வானொலிப் பெட்டிகள், வீட்டுப்
    பயன்பாட்டுப் பொருட்கள், சுவர்க் கடிகாரங்கள், பொத்தான்கள், சமையலறைப்
    பாத்திரங்கள் போன்ற பலவற்றையும் செய்வதற்கு இது மிகவும் பயன்படுகிறது.
    மெலாமைன் பிளாஸ்டிக்கும், யூரியா பிளாஸ்டிக்கின் பண்புகள் பலவற்றைக்
    கொண்டுள்ளது. இது தண்ணீர், வெப்பம் ஆகியவற்றைத் தாங்கும் வலிமை கொண்டது.
    எனவே, மின்சாதனங்களின் தயாரிப்புக்கு இது மிகவும் ஏற்றதாக விளங்குகிறது.

  • செல்லுலோசிக்:
    செல்லுலோசிக் பிளாஸ்டிக் தீயில் உருகிவிடும் தன்மையுடையது. வெப்பத்தில்
    நீர் போன்று உருகி, ஆறவைத்தால் மீண்டும் உறுதியாகிவிடக் கூடியது. எனவே
    இதிலிருந்து மீண்டும், மீண்டும் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய இயலும்.
    விரிப்புகள், உருளைகள், குழாய்கள் வடிவத்தில் செல்லுலோஸ் நைட்ரேட்
    கிடைக்கிறது; பல வண்ணங்களிலும் இது கிடைக்கிறது. விரிப்பு, உருளை,
    குழாய்களை வேண்டிய அளவில் துண்டித்து இணைக்கவும் முடியும். பேனா, மூக்குக்
    கண்ணாடிச் சட்டங்கள் ஆகியன இதிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவை. ஒளிப்படப்
    பிலிம்கள், வாகனங்களுக்கான வார்னிஷ், செயற்கைத் தோல் போன்றவையும்
    செல்லுலோஸ் நைட்ரேட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றன.

  • செல்லுலோஸ்
    அசிடேட்: இதுவும் செல்லுலோஸ் நைட்ரேட் போன்றதே எனினும், இது வெப்பத்தைத்
    தாங்கும் ஆற்றல் கொண்டதாகும். செல்லுலோஸ் அசிடேட் பிளாஸ்டிக்
    துகள்களிலிருந்து, படிவ அச்சுகளைப் பயன்படுத்தி, பல்வேறு பொருட்களைத்
    தயாரிக்க இயலும். தண்டுகள், குழாய்கள், விரிப்புகள் போன்றவற்றைத்
    தயாரிக்கலாம். மெல்லிய பிலிம்களையும் தயாரிக்கலாம். மெல்லிய பிளாஸ்டிக்
    பிலிம்களை ட முதல் 1/8000 செ.மீ. தடிமன் அளவுக்கும் கூட தயாரிக்கக்கூடும்.
    எக்ஸ் கதிர் பிலிம்களையும் தயாரிக்க இயலும். அசிட்டேட் ரேயான் இழைகளும்
    இதைக்கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றன.

  • எதனாய்ட்:
    இந்த வகையில் முக்கியமான பிளாஸ்டிக்குகளாக விளங்குபவை பாலிஸ்டெரின்,
    பாலிவினைல் கலவை, பாலி மீதைல் மெதாக்ரைலேட் மற்றும் பாலிதைலேன்
    ஆகியனவாகும். பாலிஸ்டெரின் வகை நிறமற்றதும், பளிங்குபோல்
    காட்சியளிப்பதுமாகும். இதில் தேவையான வண்ணத்தைப் பூசலாம். பலவகைப்
    பொம்மைகள், மின்கல உறைகள், பெனிசிலின் சிரிஞ்சுகள் போன்றவற்றைத் தயாரிக்க
இது உதவுகிறது. இதன் விலையும் குறைவு.

  • பாலிவினைல்
    குளோரைட் (பிவிசி): வினைல் பிளாஸ்டிக்குகள் வகையில் இது மிக முக்கியமான
    ஒன்றாகும். மின்செப்புக் கம்பிகளைச் சுற்றும் உறையாக இது
    பயன்படுத்தப்படுகிறது. வாகன இருக்கைகள், மழைக்கால உடைகள், தரை விரிப்புகள்
    தயாரிக்கவும் இது பயன்படுகிறது. பல வடிவங்களிலும், கவர்ச்சியான
    வண்ணங்களிலும் இப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கிராமபோன் இசைத்தட்டுகள்
    தயாரிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது. இதனைக் கொண்டு உருவாக்கப்பட்ட
    காலணியின் அடிப்பாகம், தோலால் உருவாக்கப்பட்டதை விட வலிமை வாய்ந்ததாக
    விளங்குகிறது. வினைல் பிளாஸ்டிக்கைக் கலந்து உருவாக்கப்பட்ட ஆடைகள் தோலால்
    செய்யப்பட்டவை போல் இருக்கும்; இதனைக் கலந்து உருவாக்கிய காகிதம், அட்டைப்
    பெட்டி செய்யப் பயன்படுகிறது. எண்ணெய், தண்ணீர் போன்றவற்றால் இது
    ஈரமாவதில்லை. செயற்கைப் பற்கள் மற்றும் கண்கள்: பாலி மீதைல் மெதாக்ரைலேட்
    எனும் பிளாஸ்டிக் மிகவும் லேசானது; தௌ¢ளத் தௌ¤வானது; பிளாஸ்டிக் தடிகள்,
    குழாய்கள், விரிப்புகள் தயாரிக்கப் பயன்படுவது. இவ்வகைப் பிளாஸ்டிக்கில்
    வண்ணங்களைக் கலந்து இருளில் ஒளிரும் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
    விமானச் சாளரங்கள், இருக்கைகள், மூக்குக் கண்ணாடி வில்லைகள், மருத்துவக்
    கருவிகள், செயற்கைப் பற்கள், செயற்கைக் கண்கள் ஆகியன தயாரிக்கவும் இது
    பயன்படுத்தப்படுகிறது.

  • பாலி
    எதிலின்: பாலி எதிலின் என்பது பிளாஸ்டிக்கின் அண்மைக்கால வளர்ச்சியாகும்.
    இது பிளாஸ்டிக் துகள்கள், பிலிம்கள், விரிப்புகள், குழாய்கள் ஆகியவற்றைத்
    தயாரிக்கப் பயன்படுவதாகும். மின் கருவிகள் தயாரிப்பிலும், உணவுப்
    பொருட்களைப் பொட்டலங்களாகக் கட்டுவதற்கும் இது பயன்படுகிறது. நைலான்
    பொருட்கள்: நைலான் என்பது பாலிமைட் பிசின் வகையைச் சார்ந்தது; இழைகள்,
    துகள்கள், விரிப்புகள், குழாய்கள், கயிறு, நூல் ஆகிய வகைகளில் இது
    கிடைக்கிறது. நைலான் மிகவும் வலிமையானது; வேதிப் பொருட்கள் சேர்க்கையால்
    சேதமடையாதது. ஆல்கைட்: ஆல்கைட்கள் வண்ணப் பூச்சு வார்னிஷ்களில்
    பயன்படுவன; தண்ணீரால் அழியாதவை. பொத்தான்கள், தைக்கும் ஊசிகள், பேனா,
    நாகரிகப் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பிலும் இவை பயன்படுகின்றன.

  • வாகனங்கள்,
    கம்யூட்டர்கள், செல்போன்கள் என அனைத்தும் பிளாஸ்டிக்மயமாகி விட்ட இன்றைய
    சூழ்நிலையில், சமீப காலமாக பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கத்
    தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பொருட்களை
    உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை
    ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள்
    என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை அறவே நீக்குவது சாத்தியமா
    என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பதற்கு
    எந்தவிதமான திட்டங்களைம் தீட்டாமல், வெறும் கோஷங்கள், ஆர்பாட்டங்கள்,
    முகாம்கள் மட்டும் நடத்துவதில் பயன் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.
    பிளாஸ்டிக்குக்கு இணையான மாற்று பொருட்கள் தகுந்த அளவில்
    கண்டுபிடிக்கப்படாததால், வரும் ஆண்டுகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு
    பன்மடங்கு அதிகரிக்கும் என சென்னையில் நடந்த பன்னாட்டு பிளாஸ்டிக்
    கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

  • வளர்ந்த
    நாடுகளில் ஒருவர் ஆண்டொன்றுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக்கை
    பயன்படுத்துகிறார் எனவும், அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள ஒருவர்
    சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5.2 கிலோ மட்டுமே பயன்படுத்துவதாகவும் இந்திய
    பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. `எளிதில் மட்காமல் பலநுறு
    ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியது பிளாஸ்டிக்’ என்ற தவறான எண்ணம்
    மக்களிடையே பரவி விட்டது. இதை நன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர,
    தீமையாக கருதக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுபுறச் சூழ்நிலைக்கு
    தீங்கு செய்வதில்லை என்பதை நன்கு கூர்ந்து கவனித்தால் தெரியும். பழுதடைந்த
    பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி எறிம்போது தான் பிரச்சினைகள்
    தோன்றுகின்றன. கலர் கலரான பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக விலங்குகள்
    உட்கொள்வதாலும், கழிவுநீர்க் கால்வாய் களில் அடைப்பை ஏற்படுத்துவதாலும்
    பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. எனவே, உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை வீசி
    எறியாமல் , சேர்த்து வைத்து மறுசுழற்சி செய்வதன் முலம் சுற்றுச்சூழலை
    பாதுகாக்கலாம். சிங்கப்பூரில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, மறுசுழற்சி
    முறையில் பொருட்களை தயாரிக்கின்றனர். இவ்வாறு தயாரிக்கபட்ட பொருட்கள்
    மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதும் நிதர்சனமான உண்மை.
  • பொருளாதாரத்தில்
    முன்னேறிய நாடுகளில் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக் ஆசிட் போன்ற
    இயற்கையான பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கபட்டு
    பயன்படுத்தபடுகின்றன. அங்கு வரிச்சலுகைகள் கொடுத்து இதுபோன்று இயற்கையான
    முறையில் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதற்கு ஊக்கமளிக்கின்றனர். முயற்சி
    செய்தால் இந்தியாவிலும் இதுபோன்ற இயற்கை பிளாஸ்டிக்கைத் தயாரிக்க முடியும்.
    அதே நேரத்தில் இது சிறிதளவே செயற்கை
    பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அமையும்
    என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். எனவே, பிளாஸ்டிக்கை எதிர்த்து குரல்
    கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்கான மாற்றுபொருட்களை கண்டுபிடிபதிலும்
    சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது
    அவசியமாகும்.

Monday, December 20, 2010

ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…' எமன்


                                                                                                                      பிளாஸ்டிக் எனும் பெரும்பூதம் ஆண்மையையும் பாதிக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பிளாஸ்டிக்கில் பிதாலேட் என்னும் ரசாயனம் உள்ளது. இதுதான் ஆண்மைக்கு எமனாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பிதாலேட் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது என்பதுதான் ஆபத்துக்கு காரணமாக இருக்கிறது. 

             இதனால் சுவரில் உள்ள பெயிண்ட் மற்றும் பொருட்களில் இருந்து சாதாரண சூரிய வெப்பத்தில்கூட பெதாலேட் மூலக்கூறுகள் உடைந்து ஆவியாகி காற்றில் கலக்கும். அதுமட்டுமல்ல சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது போன்ற சாதாரண நேரங்களில் கூட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் தண்ணீருடன் வினை பட்டு பிதாலேட் உணவுடன் கலந்து உடலுக்குள் செல்லுமாம். பிளாஸ்டிக் குழாய் வழியாக வரும் நீரை உபயோகப்படுத்தி சமைப்பதும் ஆபத்துக்கு உரியதாக கூறுகிறார்கள். இப்படி பல்வேறு வழிகளில் மனிதர்களின் உடலுக்குள் புகுந்துவிடும் பிதாலேட், பிறகுதான் தன் அசுரத்தன்மையைக் காட்டத் தொடங்குகிறது.
"பிதாலேட் மூலக்கூறுகள் சிறுநீரகத்தை எளிதில் பாதிக்கிறது".   

          அதேபோல டெஸ்டிரோஜென் எனப்படும் ஆண் ஹார்மோன்களை அழிக்கும் தன்மை உடையது. எனவே காலப்போக்கில் ஆண்மையை இழக்க வைக்கும் ஆபத்தும் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
 
         குறிப்பாக கருவில் இருக்கும் ஆண் குழந்தைகளைத் தான் இந்த ரசாயனம் எளிதாக பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. வருடத்திற்கு 60 லட்சம் டன் பிதாலேட் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பல நிறுவனத்தினர் பிதாலேட் அளவை வெளியிடாததால் இந்த மதிப்பு உண்மை மதிப்பைவிடக் குறைவானது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
                  
               கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2005-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தான் முதன் முதலாக பிளாஸ்டிக்கில் உள்ள பிதாலெட் ரசாயனம் ஆபத்துக்குரியது என்று தெரிய வந்தது. கர்ப்பமாக இருந்த எலிகளை ஆராய்ச்சி செய்தனர். அப்போது பிதாலெட் ரசாயனம் கருவில் உள்ள ஆண் எலிக் குட்டிகளில் டெஸ்டிரோஜென் ஹார்மோன் சுரப்பை தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்குறி வளர்ச்சி பாதிப்பு, விதைகளின் செயல்பாடு பாதிப்பு ஏற்படுவதும், அது அடுத்த சந்ததிகளுக்கு தொடரும் வகையில் நிலைபெறுவதும் தெரிய வந்தது. 

                     நியார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் பிறந்த ஆண் குழந்தைகளிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 134 குழந்தைகளை ஆய்வு செய்தபோது தாயின் வழியாக ஆண் குழந்தைக்கு பிதாலெட் பாதிப்பு தொற்றுவதாக தெரிய வந்தது. அது ஆணுக்குரிய பாலின ஹார்மோன் சுரப்பதையும், மறு உற்பத்தி ஆவதையும் தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதே ஆய்வை அதிகம் பேரிடம் விரிவாக நடத்த அந்த ஆய்வுக்குழு முடிவு செய்திருக்கிறது. எந்திரங்கள் மூலம் உணவை பதப்படுத்தும் போதும், பிளாஸ்டிக் பாத்திரம், பாலிதின் பை ஆகியவற்றைப் பயன்படுத்துவதாலும் `பிதாலெட்’ உணவுடன் கலக்கிறது. பிளாஸ்டிக் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதன் மூலமும் இந்த ரசாயனம் மனிதனுக்குள் நேரடியாக செல்கிறது. உஷாராக இருங்கள்!

வெங்காயம்!

வெங்காயத்தின் விலை கடந்த சில தினங்களாக கிலோ ரூ.60 முதல் 70 வரை உயர்ந்து மக்கள் மத்தியில் அதைப் பற்றிய பேச்சு எழுந்தவுடன், தேசிய வேளாண் கூட்டுறவுத் தொழில்கள் சம்மேளனம் (நாபெட்) உடனடியாக வெங்காய ஏற்றுமதியைத் தடைசெய்து அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 15-ம் தேதி வரை யாரும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது. அப்படிச் செய்வதானால் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 1200 அமெரிக்க டாலராக இருந்தால்தான் அனுமதி என்றும் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையை ஏதோ திறமையான செயலாக எண்ணி வியக்க முடியவில்லை. காரணம், வெங்காய ஏற்றுமதிக்கும் உள்ளூர் விலை உயர்வுக்கும் எந்த நாளிலும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. "இந்த நடவடிக்கை, ஒட்டகத்தின் முதுகிலிருந்து ஒரு துரும்பை எடுத்து அதன் கண்ணெதிரில் கீழே போட்டு, ஒட்டகத்துக்கு எடை குறைக்கப்பட்ட மனநிறைவைத் தரும் செயலே" தவிர, அரசின் இந்த நடவடிக்கையால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.மூன்று மாதங்களுக்கு முன்பு இதேபோன்று வெங்காயத்தின் விலை உயர்ந்து இருந்தபோது, நவம்பர் மாதம் இதே நாபெட் ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையாக இருந்த 375 டாலரை, ஒரு டன்னுக்கு 525 டாலர் என்று உயர்த்தியது. ஏற்றுமதியைத் தடைசெய்வதால் அல்லது கட்டுப்படுத்துவதால் ஏதாகிலும் பயன் விளைந்திருக்க வேண்டுமென்றால், அப்போதே அதன் பலன் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் உள்நாட்டுச் சந்தையில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயத்தின் அளவில் 10 விழுக்காடு மட்டுமே மலேசியா, வங்கதேசம், சிங்கப்பூர், மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் தரமும் நமது உள்ளூர்ச் சந்தையில் கிடைக்கும் வெங்காயத்தின் தரமும் ஒன்றல்ல. ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் அளவு குறைந்தது 6 செ.மீ. அகலம் இருக்க வேண்டும். எல்லா வெங்காயமும் ஒரே சீரான நிறம், அளவில் இருக்க வேண்டும். இந்த வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்நாட்டுச் சந்தைக்கு திருப்பப்பட்டாலும்கூட, இதன் தரம் கருதி உள்நாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ ரூ.70 ஆகத்தான் இருக்குமே தவிர, குறைவாக இருக்க வாய்ப்பே இல்லை.தற்போது வெங்காயத்துக்கு இந்த விலை உயர்வு ஏற்பட மூன்று காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, உற்பத்தி குறைந்துள்ளது. 2008-09-ம் ஆண்டில் 13.5 மில்லியன் டன்னாக இருந்த வெங்காய உற்பத்தி, கடந்த 2009-10-ம் நிதியாண்டில் 12.17 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது. காரணம், வெங்காய சாகுபடிப் பரப்பு குறைந்துவிட்டது என்பதுதான்.ஏற்றுமதிக்கான வெங்காயம், உள்ளூர்த் தேவைக்கான வெங்காயம் இரண்டுக்கும் தேவைப்படும் அளவுக்குச் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கச் செய்வதிலும், சாகுபடி செய்ய ஊக்குவிப்பதிலும் கடந்த (ஏப்ரல் மாதம் முதலாகவே) 9 மாதங்களில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், வெங்காயத் தட்டுப்பாடு இல்லாமல் செய்திருக்க முடியும். செய்யத் தவறிவிட்டது.இரண்டாவதாக, அண்மையில் பெய்த மழையும் ஒரு காரணம். ஏற்கெனவே சாகுபடிப் பரப்பும் உற்பத்தியும் குறைந்திருக்கும் வேளையில், மழையால் வெங்காய சாகுபடி மட்டுமன்றி, லாரிகளில் வந்த வெங்காயமும்கூட அழுகியதால், அந்தப் பொருளிழப்பை ஈடுசெய்ய வியாபாரிகள் விலையை உயர்த்துகிறார்கள். தட்டுப்பாடு விலை உயர்வுக்கு வழிகோலத்தானே செய்யும்.அரசு ஊழியரின் சம்பள உயர்வு அறிவிப்பு வந்ததும் எல்லோருக்கும் வீட்டுவாடகை உயர்வதைப்போல பெட்ரோல் விலை உயர்வைக் காரணம் காட்டி, லாரி அதிபர்கள் வாடகையை உயர்த்தியுள்ளனர்.  வெங்காயத்தை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தடைவிதித்தவுடன் அதே வியாபாரிகள் இப்போது வெங்காயத்தை பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கி விட்டார்கள். முதல்கட்டமாக 13 டிரக்குகளில் சுமார் 1,000 டன்னுக்கும் அதிகமான வெங்காயம் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு - குறிப்பாக தில்லிக்கு - வந்து சேரவிருக்கிறது. சுங்கவரி உள்பட இந்த வெங்காயத்தின் அடக்கவிலை கிலோ ரூ.18 மட்டுமே என்று சொல்லப்படுகிறது. ஆகவே, மீண்டும் கிலோ ரூ.30க்கு தில்லி காய்கறிச் சந்தையில் வெங்காயம் கிடைப்பது திண்ணம். நம்முடைய கேள்வி இதுதான் - பாகிஸ்தானில் இவ்வளவு மலிவான விலையில் வெங்காயம் கிடைக்கும் என்றால், அதை ஏன் முன்னதாகவே இறக்குமதி செய்து, சந்தையில் வெங்காயத்தின் விலை உயராமல் இருக்கும்படி அரசு செய்திருக்கக் கூடாது? மக்கள் மீது உண்மையாகவே அக்கறை இருக்கும் என்றால் இதைத்தானே அரசு செய்திருக்க வேண்டும். இதையும் வியாபாரிகள் தான் தங்கள் லாபத்துக்காகச் செய்ய வேண்டுமா?  வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்தாலும் பெரிய மாற்றம் இருக்காது என்று தெரிந்திருந்தும் தடை செய்வார்களாம். இந்த நியாயத்தை என்னவென்று சொல்வது. என்ன நியாயமோ, வெங்காயம்.

கான்குன் மாநாட்டில் இந்தியா

புவிவெப்பமாதல் தடுப்பு நடவடிக்கையில், முதல்முறையாக இந்தியா தனது உறுதியான முடிவை அறிவித்துள்ளது. மெக்ஸிகோ, கான்குன் நகரில் நடைபெறும் ஐ.நா. புவிவெப்ப தடுப்பு நடவடிக்கை மாநாட்டில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் சட்டப்படியான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா, சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றோ, புவிவெப்பம் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ளவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. இருப்பினும் இத்தகைய முடிவுக்கு, இந்தியாவில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தர வேண்டியிருப்பதே காரணம்.இவ்வளவு வெளிப்படையாக உலக அரங்கில் பேச வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் சீனா. அண்டை நாடான சீனா, வளிமண்டல மாசுக்கான வாயுக்களைக் கட்டுப்படுத்துவதில் யாரும் தன்னை நிர்பந்திக்க முடியாது என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு இணையான தொழில்போட்டியில் உள்ள சீனா இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டுவிட்ட பிறகு, அதேபோன்ற நிலைப்பாட்டை ஏற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சியில் பெருந்தடைகள் ஏற்படாமல் இருக்கும். ஆகவே, சீனாவுக்கு இணையான  காய் நகர்த்தல் என்றே இந்த முடிவை நாம் ஏற்கவேண்டியுள்ளது.புவி வெப்பமடைதலால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க வேண்டுமானால், புவிவெப்பம் அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியஸýக்கு மேலாக உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்  என்றும் அதற்கான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஈடுபட வேண்டும் என்றும் கியோட்டோ தீர்மானத்திலும், அதன்பின்னர் கோபன்ஹேகனில் நடைபெற்ற மாநாட்டிலும் பேசப்பட்டன.இந்த இலக்கை அடைவதற்கு மிக அடிப்படையான தேவை தொழில் மாசுக் கட்டுப்பாடுதான். தொழிற்சாலைகள் கரியமில வாயு உள்ளிட்ட வளிமாசு வாயுக்களை வெளியேற்றும் பழைய தொழில்நுட்ப நடைமுறைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும். இத்தகைய நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவதென்பது அமெரிக்காவுக்குச் சாத்தியமானது என்றாலும், வளரும் நாடுகளுக்கு மிகப் பெரும் பொருள்செலவைத் தரக்கூடியது. இத்தகைய மாறுதல்களைப் புகுத்தும்போது சில தொழில்களில் ஆள்கள் குறைக்கப்பட நேரும். வேலையிழப்பு ஏற்படும். சில தொழில்கூடங்களை முற்றிலுமாக இழுத்து மூடவேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் இத்தகைய முடிவுகளைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். தடாலடியாகப் புகுத்தினால் குழப்பமும், தொழிலாளர் வாழ்க்கைச்சீரழிவும்தான் எதிர்வினையாக முடியும்.இத்தனை ஆண்டுகளாக வளிமண்டல மாசுக்கு அடிப்படைக் காரணமாகிய அமெரிக்கா இன்று நல்லபிள்ளை நானே என்று கூறிக்கொண்டாலும், தன் நாட்டில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட முன்வருவதில்லை. வளரும் நாடுகளால்தான் அதிக மாசு என்று கூறி, அவர்களுக்குப் புத்தி சொல்கிறது. நிதி தருகிறேன் தொழில்நுட்பத்தை மாற்றுங்கள் என்று சொல்கிறது. இந்தியாவுக்கு இவர்கள் தருவதாகச் சொல்லும் நிதியுதவி வெறும் வழிச்செலவு மட்டுமே.குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்த கதையாக, இந்த நிதியைப் பெறும் நாடுகளில் வளிமண்டல வாயு வெளியேற்றம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சட்டப்படியாக  கண்காணிப்போம் என்கிற நிபந்தனையையும் விதிக்கிறார்கள். இது ஒரு மறைமுகமான நெருக்கடி ஆகும். சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு இணையாக தொழில் போட்டியை நடத்த முடியாமல் பின்தங்கிப் போகும் சூழலுக்கு இட்டுச்செல்லும் என்கிற அச்சத்தால்தான் இத்தகைய முடிவை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற்கூடங்களையும் நவீனப்படுத்த போதுமான நிதி நம்மிடம் இல்லை. மேலும், இதற்காக தொழில் மேம்பாட்டுநிதி ஏற்படுத்தினாலும், அதைத் தின்பவர்கள் வழக்கமான போலிகளும், ஊழல் பேர்வழிகளாகவுமே இருப்பார்கள். இன்றைய சூழல் அப்படியாக இருக்கிறது. இந்தியாவில் இயல்பான தொழில்நுட்ப மாற்றத்தை நிகழ்த்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில்துறைக்கு சக்தி தந்து, அவர்கள் மாறும்படிச் செய்யும்நடைமுறைக்குச் சில ஆண்டுகள் அவகாசம் தேவை. புவி வெப்பமாதல் மிகமுக்கியமான பிரச்னை என்றாலும், இந்தியாவின் வளர்ச்சியும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள மக்கள் தொழில்வாய்ப்பை இழக்காமல் இருப்பதும் முக்கியம்.உலகச்சுற்றுச்சூழல்மீது இந்தியாவுக்கும் கவலையும் கரிசனமும் இருக்கவே செய்கிறது. ஆனால், இதனை எங்கள்மீது மட்டும் திணிக்காதீர்கள் என்பதுதான் இந்த வெளிப்படையான அறிவிப்பின் பொருள்